Sunday, February 18, 2007

சாகரன் இன்னும் வாழ்கிறார்.

நான் இது வரை பார்த்திராத, எனது நண்பர் தமிழ்மணம் காசி மூலம் கேள்விப்பட்ட, சமீபத்தில் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட சாகரன் அவர்களைப் பற்றி அவரது நண்பர் வெற்றிவேல் எழுதியிருந்த செய்தியை, சிந்தாநதி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். "சாகரன் இந்தியா வருகிறார்" என்ற அவரது வரிகள் உலகுக்குச் சொல்லும் செய்தியாதெனில், சாகரன் சாகவில்லை மாறாக வெற்றிவேலுடன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காலஞ்சென்ற ஒருவரை குறிப்பிடுகையில், பூதஉடல் வருகிறது என்றுதான் எழுதுகிறார்கள். ஆனால், சாகரன் எற்படுத்திய தாக்கம் வெற்றிவேலுவை மிகவும் பாதித்துள்ளது. அவருக்கும், சாகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.